"நாளை சுவாசிக்க காற்று வேண்டுமெனில் இன்றே மரம் நடுவீர்''- ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வில் ஈடுபட்ட செல்வகுமார்

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்களிடையே மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, தனி மனிதராக காங்கேயத்தைச் சேர்ந்த செல்வகுமார் (36) என்பவர், உடல் முழுவதும் மரக்கன்றுகளை சுமந்து வந்து மரம் வளர்ப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வில் ஈடுபட்டார்.



இதுகுறித்து செல்வகுமார் கூறுகையில், திரும்பூர் மாவட்டம், காங்கயம் பகுதியில் வசித்து வருகிறேன். திருப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 7 வருடங்களாக மரம் வளர்ப்பு குறித்து தனி மனிதனாக மக்களிடைய விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறேன். 

இதற்காக பிரத்யேகமாக ஆடை தைத்து அதில் 70 மரக் கன்றுகளை வைத்துள்ளேன். இது அனைத்தும் சேர்த்து 100 முதல் 120 கிலோ எடை வரை இந்த ஆடை இருக்கும். இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 70 வருடங்களைக் கடந்துள்ளதை குறிக்கும் வகையில் இந்த 70 மரக்கன்றுகள் வைத்துள்ளேன்.

மழை இல்லாமல் விவசாயம் பொய்த்துப் போனதற்குக் காரணம் மரங்களை வெட்டியதே. தற்போது மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. மீண்டும் மரக்கன்றுகளை நடவுசெய்தால் மட்டுமே மழை பெய்யும். 

தமிழ்நாடு முழுவதும், அரசு விடுமுறை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறேன். திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றேன். மேலும், இலவசமாக மரக்கன்றுகளையும் மக்களுக்கு வழங்கி வருகிறேன். 

நம் எதிர்கால சந்ததியினர் சுவாசிக்க நாம் தற்போதே மரம் நட வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக துணியால் தயாரிக்கப்பட்ட பைகளை பயன்படுத்துமாறும் விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறேன். கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்டு 32 மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

அழிந்து வரும் பனைமரங்களை காப்பாற்ற ஆறு, குளம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று பனைமர விதைகளை நடவு செய்து வருகிறேன். விவசாயிகளுக்கும் சொந்த செலவில் பனை விதை வாங்கி விநியோகித்து வருகிறேன்.

மழை பெய்ய கோவில்களில் சிறப்புப் பூஜைகளையும், யாகங்களையும் நடத்துவதைத் தவிர்த்து மரம் நட அரசும், மக்களும் முன்வர வேண்டும். இவ்வாறு செல்வகுமார் கூறினார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...